பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.,யின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை தொடர்பாக, மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: எனது தந்தை உடல்நிலை நேற்று இருந்தது போல் சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையுமில்லை.
இந்நிலையில் தற்போது மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என தெரிவித்துள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.