இந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள்.16 வயது சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது.

பல புதுமைகளை கண்ட இராணுவம், கொரில்லா தாக்குதல் என்றழைக்கப்படும் மறைமுகமான நிலப்பரப்பில் பதுங்கியிருந்து அதிவிரைவாக, அதிர்ச்சி வைத்தியம் அளித்து தன்னை விட பலம் வாய்ந்த எதிரிகளை கூட துவம்சம் செய்தல் என்று சிவாஜியின் போர் பாணியே தனி. சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சிவாஜி பிறந்த தேதி குறித்த சர்ச்சை:

சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் ஆகியோரின் இளைய மகன் ஆவார். சிவாஜி மகாராஜின் பிறந்த தேதியைக் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. வரலாற்று எழுத்தாளர்களின் முரண்பட்ட தகவல்கள் காரணமாக, இதுகுறித்து ஒருமித்த கருத்து ஏற்பட முடியாத நிலை இருந்தது.

டி.வி. ஆப்தே, எம்.ஆர். பரஞ்சபே ஆகியோர் தங்களுடைய சிவாஜியின் பிறந்த தேதி (Birth date of Shivaji) என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புத்தகம்மகாராஷ்டிரா வெளியீட்டு நிறுவனம்’ 1927ல் வெளியிட்டது. தனது கட்டுரையில் சில விஷயங்களில் இதுபற்றி திலகர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் Vaishakh Shuddha Dwitiya Shake 1549 திதி சிவாஜியின் பிறந்த திதியாகக் கருதப்பட்டு வந்தது. கிரெகோரியன் நாட்காட்டியின்படி அது 1627 ஏப்ரல் 6ஆம் தேதி வருகிறது.

(இந்தக் கட்டுரையில் Shake 1549 என வரும்போது அது கி.பி. 1627 என கொள்ள வேண்டும். shake 1551 எனும்போது அது கி.பி. 1630 என கொள்ள வேண்டும். ஷாலிவாகன் ஷேக் மற்றும் கி.பி. இடையில் 78 ஆண்டுகள் வித்தியாசம்.) ஆனால் 1627 பிப்ரவரி 19 என்று கருதப்படும் நாள் சமீபத்தில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது – Falgun Vadya Trutiya, Shake 1551 Shukla Samvastar திதிக்கு உரிய நாளாக உள்ளது. அவர் பூனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார். சிவாஜியின் இயற்பெயர் சிவாஜி ராஜே போன்சலே.

இளமை பருவம்:

சிவாஜி சிறு வயது முதலே அன்னையின் அன்பில் வளர்ந்தார். இதிகாசங்களிலும், புராணங்களிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். அதுவே அவரை ஹிந்து மத கலாச்சாரத்திலும் அதன் கருத்துக்களிலும் தீவிரமான பற்றை உண்டாக்கியது. தனது சிறுவயது முதலே அமைச்சர்கள், நிர்வாகிகள், வீரர்கள் போன்றோரின் தொடர்பில் இருந்தார்.

சிவாஜியின் தொடக்க காலம் நிர்வாகம், போர் பயிற்சி, சித்தாந்தங்கள் என்று வீரம் விளைந்த ஒரு ஆளுமையாக அவரை மாற்றியது. சிவாஜிக்கு இராணுவ பயிற்சிகளான குதிரை ஏற்றம், வாள் வீச்சு, யானை ஏற்றம் ஆகியவைகளை கற்பிக்க வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டனர். சாய்பாய் நிம்பல்கர் என்பவரை 1640 ஆம் ஆண்டு சிவாஜி மனம் முடிந்தார். சிவனேரிக் கோட்டையை சுற்றியுள்ள சகாயத்ரி மலைகளில் சிவாஜி கால்படாத இடமில்லை. அந்த மலைகளை சுற்றியுள்ள பகுதிகளை ஒரு நாள் கைப்பற்றுவோம் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

மராட்டிய பேரரசை விரிவுபடுத்திய சிவாஜி:

இந்துக்களின் சுயாட்சி (மராத்திய மொழியில் ஹிந்தவி சுயராஜ்) என்கிற சித்தாந்தத்தில் சிவாஜி பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது மாவால் பகுதி நண்பர்களுடனும், சில படை வீரர்களுடனும் ஒரு இந்து கோவிலில் ஒரு இந்து பேரரசை நிறுவ உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சிவாஜியின் இலக்கு பிற மத ராஜ்ஜியங்களை ஒழிக்க வேண்டும் என்பதல்ல. அடிமைத்தனமாக மக்களை வழி நடத்ததாத ஒரு சுதந்திர இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கியது.

தமது பிராந்திய சுல்தானாகிய பீஜப்பூர் சுல்தானின் பூனே’வை சுற்றியுள்ள கோட்டைகளின் மீது போர் தொடுக்கத் துவங்கினார் சிவாஜி. 1645ஆம் ஆண்டு தனது 17ஆம் வயதில் டோர்னா கோட்டையை தாக்கி கைப்பற்றினார். பிறகு 1647ஆம் ஆண்டு கொண்டனா மற்றும் ராஜ்கோட் கோட்டைகளை கைப்பற்றினார். பிறகு புனே தொடர்ந்து மேற்கத்திய கோட்டைகளையும் கைப்பற்றி தனது பேரரசை விரிவுபடுத்தினார். பிறகு நிறைய போர்களை அடுத்தடுத்து சந்தித்தார் சத்ரபதி சிவாஜி.

அதோடு மேற்கத்திய தொடர்களின் கோட்டைகளான சிங்கஹார் மற்றும் புரந்தார் என்று சென்ற இடமெல்லாம் போரில் வெற்றி கண்டு கோட்டைகளை கைப்பற்றி தமது பகுதிகளை மெல்ல விஸ்தரிக்க தொடங்கினார். பீஜப்பூர் சுல்தானிற்கு பெரும் அச்சுறுத்தலாக சிவாஜி இருந்ததால் சிவாஜியின் தந்தை சாஹாஜியை போலி காரணங்களை சொல்லி கைது செய்ய வருடம் 1648 ல் ஆணை ஒன்றை பிறப்பித்தார் சுல்தான். சிவாஜி எதிர்காலத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பின்னர் சாஹாஜி விடுதலை செய்யப்பட்டார். சஹாஜி இறக்கும் வரை சிவாஜி எந்த ஒரு போரிலும் ஈடுபடவில்லை.

சிவாஜி தன்னுடைய விஸ்தரிப்பு பணியை தந்தையின் மரணத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கினார். 1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.

சிவாஜியை கொல்ல நடந்த சூழ்ச்சி:

1964, 70 ஆம் ஆண்டுகளில் சூரத் நகரை தாக்கி சிவாஜி அவர்கள் சூரத் முழுவதும் கொள்ளை அடித்து தனது ராஜ்யத்தின் செல்வத்தினை பெருக்கிகொண்டார். பீஜப்பூர் சுல்தான் தன்னுடைய தலைமை தளபதியான அப்சல்கானை சிவாஜியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஆணையிட்டார். ஒரு மலையின் மேல் ஒரு கூடாரத்தில் படைகளின்றி தனியாக இருவரும் சந்தித்து கொண்டனர். இது தனக்கு அமைக்கப்பட்ட பொறியாக கூட இருக்கலாம் என்று சிவாஜி சற்று எச்சரிக்கையாக இருந்தார். அவரது யூகம் சரியானது. பேச்சுவார்த்தையின் போது எதிர்பாராத தருணத்தில் தளபதி அப்சல்கானின் (பிச்சுவா) கத்தி சிவாஜியின் மார்பை பதம் பார்த்தது.

சிவாஜி அணிந்திருந்த உள்கவசம் அவரை காப்பாற்றியது. அதற்கு பதிலடியாக சிவாஜி மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான புலி நெகங்கள் வடிவிலான உலோகத்தினால் அப்சல்கானை கொடூரமாக தாக்கினார். அப்சல்கானின் உயிர் பிரிந்தது. தளபதி இல்லாத பீஜப்பூர் படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி சிவாஜியின் சமிக்கைகளுக்காக காத்திருந்த தமது படைகளுக்கு கட்டளையிட்டார். பிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள்.

ஆக்ராவிற்கான பயணமும், தப்பிப்பும்:

1666ல், அவுரங்காசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார்.

சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். பின்னர் சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது.

மொகலாயர்களுடன் போர்:

அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.

சிவாஜி சத்ரபதியாக முடிசூடினார்:

மொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்-க்கு பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால் தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப் யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார்.

மராத்திய சாம்ராஜ்ய பேரரசராக ஜூன் 6, 1674 அன்று ராய்காட்டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (இந்து தர்மத்தை நிலை நிறுத்துவுவபர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.

சிவாஜியில் கைப்பற்றப்பட்ட வேலூர் மற்றும் செஞ்சி கோட்டை:

மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமைய வேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.

சிவாஜியின் மறைவு:

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார். தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார்.

அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே