தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” என குறிப்பிட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை:
- ஆக.10 அன்று: கேரளா-கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் விசக்கூடும்.
- ஆக. 11 அன்று: கேரளா-கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
- ஆக. 12 அன்று: தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.