கரீஷ்மா கபூர் இந்த வயசிலும் அழகா இருக்க காரணம் இதுதானாம்! நீங்க ஏன் ட்ரை பண்ணகூடாது!

கரீஷ்மா முன்னணி நட்சத்திரமாக இருந்து தமது அழகால் பலரது தூக்கத்தை தொலைத்தவர் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் வயது கடந்தும் இன்றும் பளீர் அழகோடு சருமம் மினுமினுக்க வளையவருவது நிச்சயம் கவனிக்க வேண்டியது தான். அழகு குறைபாடு என்று குறைகாண முடியாத அழகோடு காண்பவரின் கண்களை இமைக்காமல் வளைய வரும் கரீஷ்மாவின் அழகும், கச்சிதமான உடல்வாகும் இப்போதும் அவரது ரசிகர்களை வெளியேறவிடாமல் தக்கவைத்து தான் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் தங்கள் அழகின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் கரிஷ்மா தன்னுடைய அழகு ரகசியத்தை பகிர்ந்து கொண்ட குறிப்புகள் அழகை காப்பாற்ற உதவும் உங்களுக்கும் உதவும்.
உடற்பயிற்சியில் எப்போதும் அதிக ஆர்வம் செலுத்துபவர். கடுமையான உடற்பயிற்சி இல்லை என்றாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பயிற்சியை அவர் தவறவிடுவதே இல்லை.

தினசரி ஜிம்முக்கு செல்வது. செல்ல முடியாத நேரங்களில் குறைந்தது வீட்டிலேயே நடைபயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதே நேரம் உணவு பிரியையும் கூட என்று சொல்லிக்கொள்ளும் அவர் உணவையும் தேவையான அளவு எடுத்துகொள்வதால் அதிக எடை பிரச்சனை இல்லாமல் உடலை கச்சிதமாக வைக்க உதவுவதாக கூறியிருக்கிறார். பள்ளி காலத்தில் நீச்சல் அடிப்பதை ஆர்வமாக கொண்டிருந்தவர் இப்போது நேரம் கிடைக்கும் தனது குழந்தைகளுடன் நீந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
​யோகாவும் அழகும்
ஜிம்முக்கு செய்ய இயலாத நேரத்தில் எளிமையான மனதுக்கும் உடலுக்கும் உறுதியான ஆரோக்கியம் தரும் யோகப்பயிற்சியை செய்கிறாராம். யோகாவால் உடல் கச்சிதமான அமைப்பு பெறுவதோடு கூடுதலாக சரும அழகையும் பாதுகாக்கிறது என்பதை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக இவை கார்டியோ, பவர் யோகா, மூச்சுபயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை பரிந்துரைக்கிறார்.

உடலுக்கு நீர்ச்சத்து
ஆரோக்கியமான உடலை போன்று ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு தண்ணீர் மிகவும் உதவுகிறது என்கிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறாராம். அதே போல் நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரியுங்கள். உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும் போது அதிக பாதிப்புக்குள்ளாவது சருமம் தான் என்பதை மறந்திட வேண்டாம். அதனால் ஆரோக்கியமான சருமத்தை தரும் தண்ணீரை அதிக அளவு குடிக்க வேண்டும். அதே போன்று அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் தரமான நெய் சேர்த்துகொள்வதும் கூட சரும மினுமினுப்புக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றினாலே சருமம் சுருக்கமில்லாமல் இருக்கும் என்றும் அறிவுறுத்துகிறார்.

​முகத்துக்கு செய்யும் அழகு பராமரிப்பு
பெரும்பாலும் நாள்முழுக்க மேக் அப் பயன்படுத்துவதை தான் விரும்புவதில்லை என்று கூறும் இவர் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய பராமரிப்பு குறித்து கூறும் போது சருமத்தை சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து காத்துகொள்ள சன்ஸ்கீரின் பயன்படுத்த அறிவுறுத்துகிறார். இல்லையெனின் சருமத்தின் பளபளப்பை வேகமாக சூரியக்கதிரக்ள் குறைத்துவிடும்.

அழகு சாதனங்கள் மூலம் ஒப்பனை செய்து கொள்ள பிடிக்கும் என்றாலும் மிக குறைந்த அளவு அழகு சாதன பொருள்களை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார். தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மேக் அப் கலைத்த பிறகு எண்ணெய் நிறைந்த சீரத்தை கொண்டு சருமத்தை சேதமாக்காமல் சுருக்கம் விழாமல் காப்பாற்ற முடியும். மேலும் சருமத்தை மென்மையாக வைக்கவும் முடியும்.

எப்போதும் இளமையான தோற்றத்தோடு இருக்க விரும்பினால் முகத்தில் இருக்கும் அழுக்கை அவ்வபோது நீக்குங்கள். சருமம் நேரடியாக வெயில் தாக்காமல் இருங்கள். தூங்குவதற்கு முன்பு மேக் அப் கலைப்பும் சரும சுத்தத்தையும் சோம்பலில்லாமல் செய்யுங்கள் இயன்றவரை முகத்தை வறட்சிக்குள்ளாக்காமல் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். இவை எல்லாமே எளிமையான குறிப்புகள் தான். ஆனால் தொடர்ந்து செய்தால் மட்டுமே பேரழை பெற முடியும். இனி நீங்களும் இதை ஃபாலோ பண்ணுங்க!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே