உடலுறவு கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் சில நன்மைகள் கிடைக்கின்றன. அதனால்தான் உடலுறவுக்குப் பின் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்கின்றனர்.
அந்த வகையில் உடலுறவு கொள்வதால் தூக்கம் நன்றாக வரும் என்பதும் மற்றுமொரு நன்மை.
ஆனால் இதனால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகப் பலன் அடைகின்றனர் என்கிறது ஆய்வு.
நியூயார்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உடலுறவு கொள்வது தூக்கத்தை தூண்டும் என்று கண்டுபிடித்துள்ளது.
அதோடு ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் நல்ல தூக்கம் பெறுகின்றனர் என்று கூறியுள்ளது.
அதாவது உடலுறவின் நன்மைகள் இருபாலினத்திற்கும் ஒன்றானது என்று கூறி வந்த நிலையில் இது மாற்றுக் கருத்தாக வெளிவந்துள்ளது.
உடலுறவுக்குப் பின் பெண்ணின் உடல் உறுப்புகள் ஆணின் விந்தணுக்களை ஈர்த்து , தக்க வைக்க போராடுகிறது.
இதற்கு உடல் அதிக ஆற்றலை செலுத்துவதால் உடல் சோர்வடைவதாகவும் அதனால் தானாக தூக்கம் வருவதாகவும் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்த ஆய்வின் கருத்தை தீவிரப்படுத்த கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் நடத்தபட்ட மற்றொரு ஆய்வில் உடலுறவுக்குப் பின் ஆண் , பெண் இருவரும் விரைந்து தூங்கிவிடுவதாகவும், உடலுறவு கொள்ளவில்லை என்றால்தான் பெண்கள் முதலில் தூங்கிவிடுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.