மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான படம் த்ரிஷ்யம்.
கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 உருவாகவுள்ளது.
தன்னுடைய பிறந்த நாளான இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார் மோகன் லால்.
ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மோகன் லால், த்ரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் படப்பிடிப்புகளை நடத்த கேரள அரசு அனுமதி அளித்த பிறகு ராம் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக த்ரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் ஜீத்து ஜோசப்.
இதற்குப் பிறகு ராம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.