உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி தனக்கு பிசிஆர் சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இல்லை என்றும்; நேற்று இரவு ரேபிட் டெஸ்ட் செய்தபோது பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.
அத்துடன், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.