முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகிதம் வாக்குப்பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாவட்டம் வாரியாக பதிவான வாக்கு விபரங்களை தற்போது பார்க்கலாம்.

  • திருச்சி மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 76.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 76.66 சதவிகிதமும்,
  • சிவகங்கை மாவட்டத்தில் 73.4 சதவிகித வாக்குகளும் பதிவாகின
  • விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 73.65 சதவிகித வாக்குகளும்,
  • தேனி மாவட்டத்தில் 74.91 சதவீதமும்,
  • அரியலூர் மாவட்டத்தில் 81.75 சதவிகித வாக்குகளும் பதிவாகின. 
  • மதுரை மாவட்டத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில் 77.14 சதவிகிதமும்,
  • சேலம் மாவட்டத்தில் 81.66 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
  • கடலூர் மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80.94 சதவிகித வாக்குகளும்,
  • தூத்துக்குடி மாவட்டத்தில் 69.98 சதவிகித வாக்குகளும் பதிவாகின. 
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 67.63 சதவிகிதமும்,
  • திருப்பூர் மாவட்டத்தில் 73.84 சதவிகித வாக்குகளும்  பதிவாகின. 
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் 80.69 சதவிகிதமும்,
  • தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.33 சதவிகித வாக்குகளும் பதிவாகின. 
  • பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.48 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் 79 சதவிகித வாக்குகள் பதிவாகின

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே