வெறும் ரூ.599 க்கு தினமும் 5ஜிபி; கனவில் கூட எதிர்பார்க்காத வேலிடிட்டி; கலக்கும் BSNL!

பி.எஸ்.என்.எல் என்று அறியப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ரூ.599 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 5 ஜிபி அளவிலான தினசரி அதிவேக டேட்டா போன்ற நன்மைகளை 90 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது.
இந்த புதிய திட்டமானது “Work from Home, WFH” ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சராக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளை தவிர்த்து இது அதன் செல்லுபடியாகும் நாள் முழுவதும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டமானது நிறுவனம் அதன் அதன் “வொர்க் @ ஹோம்” பிராட்பேண்ட் திட்டத்தை நீட்டித்த சில நாட்களுக்கு பிறகும், அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆபரேட்டர் அதன் ரூ.299 மற்றும் ரூ.491 ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்திய சில நாட்களுக்கு பிறகும் அறிமுகமாகி உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை பிரிவு ஒரு ட்வீட் மூலம் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த புதிய பி.எஸ்.என்.எல் திட்டமானது சென்னை வட்டத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தவிர அதன் அனைத்து வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது.

விரிவான நன்மைகளைப் பொருத்தவரை, ரூ.599 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை 250 வெளிச்செல்லும் நிமிடங்களுடன் வழங்குகிறது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எம்.டி.என்.எல் நெட்வொர்க்குகளிலும் இந்த இலவச குரல் அழைப்பு பொருந்தும். மேலும், பயனர்கள் 100 எஸ்எம்எஸ்களையும், 5 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையும் தினசரி அடிப்படையில் பெறுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் “STV COMBO599″ எனும் மெசேஜை 123 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் வழியாகவும், பிஎஸ்என்எல்லின் வெப் போர்டல் வழியாகவும் இந்த புதிய திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

இதற்கு முன்னதாக பி.எஸ்.என்.எல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத் தொடர்பு வட்டங்களில் ரூ.365 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள். இந்த ரீசார்ஜ் காம்போ திட்டமானது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி தினசரி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பல இலவசங்களுடன் வருகிறது. எவ்வாறாயினும், இந்த இலவசங்கள் ரீசார்ஜ் செய்யப்பட்ட 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ.365 ரீசார்ஜ் திட்டமானது, நிறுவனத்தின் கேரள இணையதளத்தில் நேரலையில் உள்ளது. இருப்பினும் இது சென்னை – தமிழ்நாட, ஆந்திரா, அசாம், பீகார்-ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா- மேற்கு வங்கம், வடகிழக்கு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் – சத்தீஸ்கர் , ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி.-கிழக்கு, மற்றும் உ.பி.-மேற்கு போன்ற வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது.
முன்னரே குறிப்பிட்டபப்டி இது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் (மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட உள்ளூர் / எஸ்.டி.டி / தேசிய ரோமிங்) வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவச குரல் அழைப்பு வரம்பை அடைந்த பிறகு, அடிப்படை திட்ட கட்டணத்தின்படி கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

மேலும் ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை வரம்பற்ற அதிவேக டேட்டா நன்மையையும் இந்த திட்டம் பட்டியலிடுள்ளது, கூறப்பட்டுள்ள டேட்டா உச்சவரம்பு வரம்பை அடைந்த பிறகு, இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும், மற்றும் இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையையும் தொகுக்கிறது.

இலவச PRBT நன்மையானது CtopUp மற்றும் ஆன்லைன் ரீசார்ஜ்களில் மட்டுமே வழங்கப்படுகிறது, அதாவது SMS அல்லது USSD வழியாக ரீசார்ஜ் செய்யும் போது அணுக கிடைக்காது என்று அர்த்தம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த இலவசங்களின் செல்லுபடியாகும் தன்மை 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் ஆனால் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். 60 நாட்கள் செல்லுபடியாகும் இலவசங்கள் முடிந்த பிறகு, சந்தாதாரர்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளை தொடர்ந்து பயன்படுத்த வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே