சென்னை நகரில் அதிகாலையில் பரவலாக மழை

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மழை நீடித்தது.

நாகப்பட்டினம், கீழ்வேளூர், தேவூர் ,ஆழியூர் ,திருப்பூண்டி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

இதனால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

கரூர், பெரம்பலூர், தேனி, சேலம், தர்மபுரி, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களிலும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் மழை பெய்துள்ளது.

இதனிடையே, வங்க கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே