மேற்குதொடர்ச்சி பகுதி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பிற மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அனேக இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே