பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

மதுரையின் தனியார் பள்ளி வகுப்பறையில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மதுரை புதூர் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார், இன்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி முன்கூட்டியே சென்ற மாணவி அர்ச்சனா வகுப்பு அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, பள்ளி மாணவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர் மாணவியின் உடலை போலீசார் எடுத்து செல்ல தாமதமான காரணத்தால் உறவினர்களே எடுத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர், கடந்த ஒரு வாரமாக மாணவி பள்ளிக்கு வராத நிலையில் இன்று முன்கூட்டியே வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் வீட்டில் ஏதாவது பிரச்சினை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே