புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புயல் பாதிக்கும் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் சென்னை, பெங்களூர் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே