தமிழகத்தில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு..!!

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் லண்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துள்ள 30க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

லண்டனில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு பயணிக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் மூவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

உருமாறிய வைரஸ் தொற்றினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், இந்த உருமாறிய வைரஸ் ஏற்கனவே உள்ள வைரஸை விட வீரியம் குறைவானதுதான் என்றும், பரவும் வேகம் மட்டுமே அதிகம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே