ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில்,வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள் .பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள் ,ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் , எரிவாயு , மண்ணெண்ணெய் , மருந்து ,பேட்டரிகள் , டார்ச்கள் , முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே