வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதமாகும் என்றும்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற 36 மணி நேரமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் கேரளாவில் டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே