சென்னையில் மழை பாதிப்பு – புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!!

மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், விடிய விடிய சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது.

ஒரு இரவு விடாமல் பெய்த மழைக்கே சென்னை சென்ட்ரல், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் மழை பாதிப்பால் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், மழை பாதிப்பு தொடர்பாக 044 25384530, 044 25384540 ஆகிய எண்களில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே