சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி..!!

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே இன்று காலை கூட்டணி உறுதியாகி, தொகுதி பங்கீட்டில் கையெழுத்தானது.

அதில், என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானா, பாமகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படாததால், பாமக தனித்து போட்டியிடும் என புதுச்சேரி மாநில பாமக துணைத் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில், பாஜகவுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே