திட்டமிட்டபடி நாளை யாத்திரை – எல்.முருகன் அறிவிப்பு..!!

நாளை வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்ட படி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வேல் யாத்திரை தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது.

அதில் அவர்கள் வழங்கும் விதிமுறைகளை பின்பற்றி வேல் யாத்திரை நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறினார்.

வேல் யாத்திரையில் பாஜகவினர் முகக்கவசம் அணிவதில்லை என எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முகக்கவசம் உள்ளிட்ட அரசின் வழிமுறைகளை பின்பற்றியே பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தினோம் எனவும்; இனியும் அதை பின்பற்றியே வேல் யாத்திரையை நடத்துவோம் எனவும் கூறினார்.

வேல் யாத்திரை தொடர்பாக நடைபெறும் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு நல்லதாக வரும் என நம்புவதாக கூறிய எல்.முருகன், நாளை திட்டமிட்டபடி சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வேல் யாத்திரை தொடங்கும் என எல்.முருகன் திட்டவட்டமாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே