புதிய இந்தியாவின் தேவைக்காக கல்வி கொள்கையை அமைத்திருக்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கல்விக்கொள்கை தொடர்பாக ’21ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி கொள்கை’ என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
*கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மாறவில்லை
*30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை
*பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமாக இருக்கிறது
*புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும்
*புதிய இந்தியாவின் தேவைக்காக கல்வி கொள்கையை அமைத்திருக்கிறோம்.
*புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
*புதிய கல்விக்கொள்கைக்காக 5 ஆண்டுகள் உழைத்தும் பணி இன்னும் முடியவில்லை
*இக்கல்வி கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது*மழலை கல்வியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம்
*அனைவரும் ஒருங்கிணைந்து என்ன உள்ளதோ புதிய கல்வி கொள்கையை அப்படியே அமல்படுத்த வேண்டும்
*புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும்
*வெற்றிகரமாக அமல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.