பாலியல் வன்கொடுமை கொலை; இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் – ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், பெற்றோர்கள் அந்த சிறுமையை பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இதைதொடர்ந்து, நேற்று (01-ம் தேதி) வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது.

இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில், அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது! பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே