எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.
இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, இன்று அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதில் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.