‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன்; ஆனால் இப்போதும்..” – துல்கர் சல்மான்

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ இண்டிபெண்டண்ட் பாடலை பிரபல நடிகர் துல்கர் சல்மான் பாராட்டியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் ‘அறிவு’, ஆகியோர் இணைந்து பாடிய ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூடியூப்பில் வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே பிரபலங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்பாடல் யூடியூப் ட்ரெண்டிலும் முதலிடம் பிடித்தது.

நேற்றைய தினம் இந்தப்பாடல் 10 லட்சம் லைக்குகளை பெற்ற முதல் இண்டிபெண்டெண்ட் பாடல் என்ற சாதனையை செய்தது. இந்நிலையில் இந்தப்பாடலை பாராட்டி நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலில் நினைவில் நிற்கும் இசை மட்டுமல்லாது, இசைக்கு ஏற்றவாறு வீடியோவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போதும் கூட பாடலில் இருந்து புது விதமான ஒலிகளை உணர்கிறேன். ஹேட்ஸ் ஆப் சார், பாடகி தீயின் குரலும் ஸ்டைலும் மிக நன்றாக இருக்கிறது. தெருக்குரல் அறிவு ஒரு ராக் ஸ்டார்”  என்று கூறியுள்ளார். முன்னதாக இந்தப் பாடலை பா.ரஞ்சித், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே