ஆண்டு தொடக்கத்தில் ரூ.27 முதல் 30 வரையிலேயே நீடித்து வந்த தங்க விலை மாறிமாறி ஏற்றதையும் இறக்கத்தையும் கண்டது.
அதனைத்தொடர்ந்து, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவால் தங்க விலை வரலாறு காணாத விலை உயர்வை அடைந்ததது.
சுமார் ரூ.44 ஆயிரம் உயர்ந்த தங்கம் 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது.
ஏற்கனவே பண ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த மக்களிடையே இந்த தங்க விலை உயர்வு பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
தங்கம் மட்டும் அல்லாது வெள்ளி விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று தங்க விலை அதிரடியாக குறைந்ததைத் தொடர்ந்து இன்று அதிகரித்துள்ளது.
இதனால் மீண்டும் புதிய உச்சத்தை எட்டுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,084க்கு விற்கப்படுகிறது.
அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,672க்கு விற்கப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளி விலை ரூ.1.60 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.