முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, ரத்த ஓட்டம் சீராக உள்ள நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது 11ம் தேதி உறுதியானது.
84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்கான மருத்துவமனை சென்றார். அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்ட நிலையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் கடந்த ஒரு வாரத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் பிரணாப் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்திருந்தது. தற்போது அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.