ரேசன் கார்டுகளில் சர்க்கரை பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், தகுதி அடிப்படையில், அரிசி பெறும் ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஒருமுக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் தற்போது பொது விநியோகத் திட்டத்தில் 5,80,298 குடும்ப அட்டை தாரர்கள் சர்க்கரை பெறும் ரேசன் குடும்ப அட்டைகள் உள்ளன.

இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அரிசி பெறும் வகையில் ரேஷன் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்று, சர்க்கரை பெறும் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்.

இதற்கு, அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் வரும் டிசம்பர் 20 -ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் வழங்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனே பரிசீலனை செய்யப்பட்டு, அரிசி பெறும்வகையில் குடும்ப அட்டைகளாக மாற்றித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே