#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 809 பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 38 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 8 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே