ராஜஸ்தான் சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் திங்கள்கிழமை காலமானார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால் (வயது 72).
இந்தாண்டு மே மாதம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், திங்கள்கிழமை சிகிச்சைப் பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார்.
மேக்வாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் கூறுகையில்,
“எங்கள் மூத்த அமைச்சர் பன்வர் லால் மேக்வால் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு காலமானதில் மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
1980ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்த மிகக் கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.