நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒரே நாளில் 90,123 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,20,360 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,290 பேர் உயிரிழந்ததை அடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 82,066 ஆக அகரித்துள்ளது.
கரோனா பாதித்தவர்களில் தற்போது 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 39,42,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் இதுவரை 5,94,29,115 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.