பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவால் அதிகம் சேதாரத்தை சந்தித்துள்ள நாடுகள் அமெரிக்கா, மற்றொன்று பிரேசில். அதிலும் குறிப்பாக பிரேசிலில் சில நாட்களாக கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது.
நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து வருகிறது. இன்று உச்சக்கட்டமாக 60,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனாவின் மையமாக பிரேசில் நாடு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றுகளை குறைக்கும் வண்ணம், ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் இறங்கி இருக்கின்றனர்.
ரஷ்யாவானது மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து இருக்கிறது. தமது மகளுக்கு அந்த தடுப்பூசி மருந்து செலுத்தி இருப்பதாகவும், அவர் நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.