கொரோனா தொற்றின் மேலும் புதிய 3 அறிகுறிகள்…

கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மணம்-சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நோயாளிக்கு தகுந்தாற்போல் அறிகுறிகளும், நோயின் தாக்கமும் மாறுபடும்.

கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே