டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 3,460 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 77,240 ஆக உயர்ந்தது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 77,240 ஆக உயர்ந்துள்ளது. அதில் 26,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,326 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 47,091 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,492 ஆக அதிகரித்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.