இந்தியாவில் ஒரே நாளில் 86,052 பேர் பாதிப்பு; 1,141 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 58,18,570 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தொற்று நோயால் இதுவரை 92,290 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,141 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,56,164 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 9,70,116 ஆக உள்ளது. 

அதே நேரத்தில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,89,28,440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் நாடு முழுவதும் 14,92,409 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே