கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறவில்லை.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

தமிழக மக்கள் தொகை, கரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசு மூலமும், பிற வழிகள் மூலமும் தலா 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

மத்திய அரசு மூலம் 25.84 லட்சம் தடுப்பூசியும் பிற வழிகள் மூலம் 16.74 லட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்திற்கு போதிய அளவிலான தடுப்பூசிகளை வழங்கக்கோரி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே