அடிக்கடி உடலுறவு கொண்டால், ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் குறையும்.
திருமணம் செய்து வைத்தவுடன் பல தம்பதிகள் உடனே கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தம்பதிகள் பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.
திருமணம் ஆனவுடன் சில தம்பதிகள் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் அவர்களால் கருத்தரிக்க முடியாமல் போகும்.
இப்படிப்பட்ட தம்பதிகள் எத்தனை முறை உடலுறவு கொண்டால் கருத்தரிக்க முடியும் என்று சமீபத்தில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் கூறப்பட்டவை :
சராசரியாக தம்பதிகள் கருத்தரிக்க முயற்சி செய்யத் தொடங்கும் நேரத்திலிருந்து 76 முறை உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இந்த 78 முறையானது சுமார் 6 மாத காலமாகும்.
ஆனால் சுமார் 2000 பெற்றோர்களை கொண்டு ஒரு ஆய்வு செய்தபோது, சீக்கிரம் கருத்தரித்தவர்கள் ஒரு மாதத்திற்கு 13 முறை மட்டும் உடலுறவு மேற்கோண்டவர்கள் என்பது தெரியவந்தது.
அந்த ஆய்வின் முடிவுகள்:
கருத்தரிக்க முயற்சிக்கும் போது, பலரும் உடலுறவு கொள்வதை ஒரு பகுதி வேலையாக உணர்கின்றனர்.
அதில் 45 சதவீத மக்கள் கட்டாயம் கருத்தரிக்க வேண்டுமென்ற ஒருவித அழுத்தம் மற்றும் பயத்துடன் உடலுறவு மேற்கொள்கின்றனர்.
இதனால் கருத்தரிக்க முடியாமல் போகுமோ என்ற எண்ணம் பல பெண்களுக்கு தோன்ற ஆரம்பிப்பதும் தெரியவந்துள்ளது.
இப்படிப்பட்ட தம்பதிகள் உங்கள் குழந்தையின் மீது கவனம் செலுத்தி, ஒருவரை ஒருவர் நினைவில் வைத்து அன்பை பகிர்ந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலுறவு கொள்ளும் நிலையைப் பொறுத்து கருத்தரிக்கலாம் என்று தம்பதிகள் நம்புகின்றனர். அதனால் உடலுறவில் டாக்கி ஸ்டைலை சுமார் 38 சதவீத தம்பதிகள் பயன்படுத்துகின்றனர்.
கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபடக்கூடாது.
பல முறை உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று பலரும் நினைக்கலாம்.
ஆனால் உண்மையில் இல்லை. அடிக்கடி உடலுறவு கொண்டால், ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் குறையும்.
தம்பதிகள் 2 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பும், அண்டவிடுப்பு நாளும் ஆகும்.
அண்டவிடுப்பின் இரண்டு நாட்கள் மற்றும் அண்டவிடுப்பின் நாளில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அண்டவிடுப்பின் போது, கருப்பை ஒரு முதிர்ந்த கருமுட்டையை வெளியிடும். இந்த முட்டை கருப்பைக்கு செல்லும் வழியில் ஃபாலோபியன் குழாய் வரை செல்கிறது.
இந்த செயல்முறையின் போது, விந்தணுக்கள் கருவுற்ற முட்டையை சந்திக்கின்றன.
விந்தணு ஒரு பெண்ணின் உடலுக்குள் சுமார் 5 நாட்கள் வரை வாழக்கூடும். ஆகவே, கருத்தரிக்க முயற்சிக்கும் போது, அண்டவிடுப்பின் போது, விந்தணுக்களானது ஃபாலோபியன் குழாய்களில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதற்கு அண்டவிடுப்பிற்கு 2-3 நாட்கள் முன்பிருந்தே உடலுறவில் ஈடுபட வேண்டும்.
வீட்டின் காலண்டரில் உங்களுடைய மாதவிடாய் சுழற்சி காலத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு சுழற்சியும், உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில் தொடங்கி, அடுத்த சுழற்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக முடிவடைகிறது.
உங்கள் சுழற்சியின் நடுப்பகுதியைத் தேடுங்கள்.
உங்களுடைய சுழற்சி 28 நாட்களைக் கொண்டிருந்தால், 14 ஆம் நாள் தான் உங்களின் அண்டவிடுப்பு/ஓவுலேசன் காலமாகும்.
இந்த நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கலாம்.