காமம் இல்லா காதல் இல்லை..; காதல் இல்லா காமம் தொல்லை..!!

உன் காதல் மட்டுமே வேண்டும் என்பதால் உன்னையே சுற்றி வருகிறேன்.. யாரை வேண்டுமானால் காதலிக்கலாம் என்றால் ஒரு நாயை கூட காதலிக்கலாம்..

காதல் காமம் இரண்டுக்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் இருக்கிறது.

காதல் தொடக்கம்..காமம் முடிவு என்று சொல்லலாமா..? இல்லை காமம் தான் முதல் அப்புறமே காதல் என்று சொல்லலாமா?..

நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார் – ஒரு பெண்ணை பார்த்ததும், அவளை தொட்டுப்பார்க்க வேண்டும், அவளை நமக்கென்று சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றும்; அந்த தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் வருவதால் காமம் தான் முதல் அது பிறகு காதலாய் மாறுகிறது.

பார்த்தவுடன் காதல் என்பது எல்லாம் பேத்தல் என்று அவரின் மிக யதார்த்தமாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பெண்ணை/ஆனண பார்த்தவுடன், இவள்/இவன் நமக்கு (தனக்கு மட்டும்) சொந்தம் ஆகவேண்டும் என்று நினைப்பதில் காதல் மட்டும் இருக்கிறாதா?.. நிச்சயம் இல்லை.

காமம் கலக்காத காதல் இருக்கிறது என்பது எல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம். அப்படி நிச்சயமாக ஒன்றும் இல்லை.

ஆனால் காதல் கலக்காத காமம் நிறையவே நிரம்பி கிடக்கிறது. பார்க்கும் பார்வையிலிருந்து, நடந்துக்கொள்வது, பேசுவது, தொடுவது எல்லாவற்றிலுமே மிதி மிஞ்சி பார்க்கலாம்.

கவியரசு வைரமுத்து அவர்களின் மிக அழகாக அற்புதமான வரிகள்-

ஆடைக்குள் நிர்வாணத்தை தேடுவது காமம்
நிர்வாணத்துக்குள் ஆடையை தேடுவது காதல்

காதலுடன் எழுதும், பேசும் வரிகளில் ஆபாசமும், வக்கிரமும் சேர்ந்து இருக்காது. அதற்கு நேர் எதிர் காமத்துடன் பேசும், எழுதும் வார்த்தைகளில் நிறைய ஆபாசமும், வக்கிரமும் இருக்கும்.

நம் தமிழ் சினிமா பாடல்களில் நிறைய உதாரணங்கள் இரண்டிற்குமே உண்டு.

ஒரு ஆணோ பெண்ணோ பேசும் போதே அதில் காதல் மிஞ்சி இருக்கிறதா இல்லை காமம் மிஞ்சி இருக்கிறதா என கண்டுக்கொள்ளலாம்.

மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபலிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபலிப்பது காமம்.

காதல் என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவது, படிப்பு, பணம், அழகு, எதிர்காலம் எதையுமே பார்க்காமல் வருவது. ஒருவரை பார்த்தவுடன் வருவது.

காதல் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தொடங்கினாலும், பிறகு நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது என்பது தான் உண்மை.

காமத்திற்கு அப்படி ஒன்றும் இல்லை ஒன்றே குறிக்கோள் “உடம்பு”.

காதலை போன்ற மனம் சம்பந்தபடாத மிக எளிதான விஷயம். காதல் மிக மெல்லிய, அற்புதமான உணர்வு என்றாலும், அதுனுடைய வலியும் சுமையும் அதிகம்.

காமத்திற்கு அப்படி மனதளவில் வலி ஒன்றும் இல்லை. காமம் முயற்சிப்போம் கிடைத்தால் சரி இல்லையேல் ஒரு பிரச்சனை இல்லை.

காதல் கிடைக்கவில்லை என்றால், அதன் விளைவு அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனையும், விரக்தியும், காதல் எளிதல்லவே….

உடம்புக்கும்,மனதிற்கும் உள்ள வித்தியாசமே காமமும் காதலும்..

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே