பெண்ணுறுப்பை மற்ற உடல் உறுப்புகளை போல சாதாரணமாக யாரும் காண்பதில்லை. அது ஒரு கவர்ச்சி பொருள், இச்சை பசியை தீர்த்துக் கொள்ள அதுவொரு பண்டம்.

பெண்ணுறுப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று இந்த சமூகம் தான் தீர்மானம் செய்கிறது.

ஷேவிங் செய்ய வேண்டுமா? முடி இருக்கலாமா? வாசனையாக இருக்க வேண்டுமா? நாற்றம் அடித்தால் தவறா? நாப்கின், வெள்ளைப்படுதல், பீரியட்ஸ், பெண்ணின் வலிமை, வலுவிழத்தல் என பெண்ணுறுப்பு சார்ந்து இந்த சமூகத்தில் நிறைய பொய்கள் நிலவி வருகின்றன.

சில பொய்கள் பெண்களையே அவர்கள் பிறப்புறுப்பு சார்ந்து அவமானமாக கருத செய்கிறது.

இனிமேலும், இந்த பொய்களை நம்பி சோர்ந்து போக கூடாது…

பொய் #1

பெண்களுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் என்பது இயற்கையான ஒன்று. இது அவரவர் உடல்வாகு பொருத்து அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும்.

உடல் சூடு காரணமாக அதிகம் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், சமூகத்தில் வெள்ளைப்படுதல் என்பதை அசிங்கமானதாகவும், நடக்கக் கூடாத ஒன்றாகவும் காண்கிறார்கள்.

#PantyChallenge வெள்ளைப்படுதல் என்பது முகம்சுளிக்க தக்கது அல்ல என்பதை வெளிப்படுத்த பெண்கள் #PantyChallenge ஒன்றை மேற்கொண்டனர். இதில் தங்கள் வெளிப்படுதல் ஏற்பட்ட உள்ளாடையை புகைப்படம் எடுத்தும் பகிர்ந்தனர்.

முற்றிலும் இயற்கையான ஒன்றை பல காலமாக அசிங்கமானது என்பது போன்ற பிம்பம் நம் சமூகத்தில் உருவாகி இருக்கிறது. இதை அசிங்கம் என்று கருதி வருத்தப்படும் பெண்களும் கூட இருக்கிறார்கள். எனவே, முதலில் இந்த பொய்யை நம்புவதை நிறுத்த வேண்டும்.

வெள்ளைப்படுதல் என்பது பெண்ணுறுப்பு இருக்கும் அனைவரும் எதிர்கொள்ளும் விஷயம். எனவே, இதில் தவறேதும் இல்லை. ஆனால், இதை ஒரு அவமானமாக கருதும் படியாக மாற்றிவிட்டனர்.

பொய் #2

அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான். இது ஆரோக்கியமானதும் கூட.

ஆனால், பெண்ணுறுப்பில் நாற்றம் ஏற்படாமல் நறுமணமாக இருக்க வேண்டும் என்று கூறுவது தவறு.

பிறப்புறுப்பு என்று மட்டுமல்ல, அக்குள், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் அதிகம் வியர்வை சுரப்பதால் சற்று துர்நாற்றம் வர தான் செய்யும்.

ஆனால், அது பெண்ணுறுப்பில் இருந்து மட்டும் வந்தால் ஏதோ மோசமாக காண்பது ஆணாதிக்கத்தால் உருவான ஒன்று.

ஆண்கள்? எங்கேனும் ஆண்களை பிறப்புறுப்பை வினீகர் ஊற்றியும், வாசனை திரவியம் பயன்படுத்தியும் சுத்தம் செய்ய கூறி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஆனால், பெண்களை மட்டும் இப்படியான வகையில் தூண்டுவது ஏன்? பெண்ணுறுப்பை ஒரு உடன் அங்கமாக காணாமல் கவர்ச்சி பொருளாக காண்பதால் தான் இத்தகைய தூண்டுதல்கள் ஏற்படுகின்றன.

சுகாதாரம் வேறு, வாசனையாக தான் இருக்க வேண்டும் என்று வறுபுறுத்தி பெண்களை தங்கள் பிறப்புறுப்பு சார்ந்த அவமானப்பட வைப்பது வேறு.

பொய் #3

ஏற்கனவே நாம் முந்தைய பத்தியில் கண்டது தான். பிறப்புறுப்பு என்பது மற்ற பாகங்களை போல சாதாரணமாக காண முடியாது.

முக்கியமாக பெண்கள் மத்தியில். பெண்ணுறுப்பு சுகாதாரம் என்பது அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று.

பெண்கள் அதிகம் பொது கழிப்பிடங்களை பயன்படுத்த தவிர்ப்பதன் காரணம், எளிதாக தொற்று ஏற்படும் அபாயம் அவர்களுக்கு இருக்கிறது.

எதற்கு? எனவே, பெண்ணுறுப்பு சுகாதாரம் அவசியம். ஆனால், பெண்ணுறுப்புக்கு என்று தனி சோப்பு, திரவியம்.

அதை வாசனையுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தவறு. இப்படியாக கூறி விற்கப்படும் சில பொருட்கள் பெண்ணுறுப்பில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களுடன் சேர்த்து, நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடுகிறது.

இதனால் அவர்கள் ஆரோக்கியத்திற்கு தான் கேடு விளைகிறது. பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் சோப்பே பயன்படுத்த வேண்டாம்..

நீர் ஊற்றி கழுவினால் போதும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பொய் #4

தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொண்டே இருந்தால்… பெண்ணுறுப்பு அதன் வடிவத்தை, இறுக்கத்தை இழந்துவிடும் என கூறுவது முற்றிலும் பொய்யானது.

அதே போல செக்ஸ் உறவில் ஈடுபடாமல் இருந்தால் பெண்ணுறுப்பு இறுக்கமாகிவிடும் என்பதும் பொய் தான்.

பொதுவாக ஆண்களின் பிறப்புறுப்பு நீளமானது 3 அங்குலம் இருக்கும். விறைப்பு ஏற்படும் போது ஐந்து முதல் ஆறு அங்குலம் வரை இருக்கும்.

அதேபோல, தடிமனானது சாதாரணமாக மூன்று அங்குலம் வரையிலும், விறைப்பு ஏற்படும் போது நான்கு முதல் ஐந்து அங்குலம் வரையிலும் அதிகரிக்கலாம்.

இதர காரணங்கள்… சராசரியாக குழந்தை பெற்றெடுக்கும் போது பெண்ணின் பிறப்புறுப்பு 20 இன்ச் வரை விரிவடைகிறது.

பெண்ணுறுப்பு என்பது எலாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது. தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சிறிய மாற்றம் ஏற்படுவது இயல்பு.

ஆனால், செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டால் பெரிதாகிவிடும். ஈடுபடாமல் இருந்தால் இறுக்கமாகிவிடும் என்பதெல்லாம் பொய்.

வயது மற்றும் சில மருத்துவ நிலை காரணமாக கூட பெண்ணுறுப்பின் வடிவம், தன்மை மாற்றம் காண வாய்ப்புகள் உள்ளது.

பொய் #5

Kegel என்பது ஒரு வகையான உடற்பயிற்சி இது இடுப்பு எலும்பு பகுதி வலிமையை அதிகரிக்கும். இதனால், இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய வலிமை கூடும் என்று நம்பப்படுகிறது.

குழந்தை பிறக்கும் வரையில் இந்த பயிற்சி அவசியம் இல்லை என்று சிலர் கூறுவார்கள். யார் வேண்டுமானாலும்… ஆனால், பொதுவாகவே இந்த பயிற்சி மிகவும் நல்லது.

இது இடுப்பு பகுதியை வலிமையாக்க உதவும். சிறுநீர் பை, கருப்பை ஆரோக்கியத்தை, குடல் இயக்கத்தை இது ஊக்கவிக்கும்.

ஆனால், இதை ஒரு செக்ஸ் உடற்பயற்சி என்பது போல உருவாக்கிவிட்டனர். குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு இடுப்பு பகுதி கொஞ்சம் வலுவிழந்து காணப்படும்.

எனவே, அதற்கு பிறகு இதை சீராக பின்பற்றினால் இழந்த வலிமை மீண்டும் பெறலாம் எனவே, இதை குழந்தை பிறந்த பிறகு செய்ய கூறுகிறார்கள்.

ஆனால், இந்த பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

பொய் #6

இருப்பதிலேயே கொடுமையானது இதுதான். ஆண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் முடி இருக்கலாம்.

அதை பற்றி இந்த சமூகம் எதுவும் கூறாது.

ஏன், மார்பு, அக்குள் போன்ற பகுதிகளில் முடியுடன் ஆண்கள் வெளியே கூட வெற்றுடலுடன் வரலாம். அதில் எந்த குறையும் இல்லை.

ஆனால், ஸ்லீவ்லெஸ் உடையணியும் போது பெண்ணுக்கு அக்குள் பகுதியில் கொஞ்சம் முடி தெரிந்துவிட்டால்.. ஏதோ தீவிரவாதி துப்பாக்கியுடன் வருவதை போல பார்ப்பார்கள். கேலி செய்வார்கள்.

உடன் இருக்கும் பெண்கள்.. ஷேவ் செய்ய மறந்துவிட்டாயா என அறிவுரை செய்வார்கள்.

ட்ரிம்! தன் சொந்த உடம்பில் முடி எங்கு இருக்க வேண்டும், கூடாது என்பதை கூட சமூகம் தான் தீர்மானிக்க வேண்டுமா?

ஒரு பெண்ணை கவர்ச்சியாக பார்க்க என்னவெல்லாம் வேண்டுமோ, அதை எல்லாம் அவள் மீது திணிக்கிறது இந்த சமூகம்.

உண்மையில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அந்தரங்க பகுதிகளில் முடிகளை முற்றிலும் ஷேவ் செய்வது தவறு.

இதனால் பாக்டீரியா தாக்கம், தொற்று தான் ஏற்படும். அதிகமாக முடி வளர்ச்சி ஏற்பட்டால் ட்ரிம் செய்து கொள்வது நல்லது, ஷேவிங் அல்லது வாக்ஸிங் செய்ய வேண்டாம் என்றும் நிபுணர்களே அறிவுரைக்கின்றனர்.

பொய் #7

ஒவ்வொரு மாதமும் வலியை எதிர்கொள்கிறார் பெண், அந்த மூன்று நாட்களில்.

நாம் அவளுக்கு உறுதுணையாக இல்லையெனும் குறைந்தபட்சம் உபத்திரமாக இல்லாமல் இருந்தால் சரி!

எத்தனயோ பெண்கள் எதிர்பாராத தருணத்தில் பீரியட்ஸ் துவங்கி அந்த நாள் முழுக்க தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

அங்கே நாம் நாப்கின் வாங்கி உதவாவிட்டாலும், அவர்களது இரத்தப்போக்கை கேலி, கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே